
“அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்…”
வேதப்பகுதி: யாக்கோபு 5:15
ஜெபத்திற்கான இடம்
ஜெபத்தைக் குறித்து தெளிவாக இருக்கும்படி யாக்கோபு தனது வாசகர்களை ஊக்கப்படுத்தினார். ஆயினும், ஜெபமென்பது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இருக்கும் காரியம் என்று அர்த்தமில்லை.
“அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.” யாக்கோபு 5:15
1. “விசுவாசமுள்ள ஜெபமும்”
அ) யாக்கோபு தவிர்க்கமுடியாத ஒன்றை இங்கு வெளிப்படுத்துகிறார்.
ஆ) எல்லா ஜெபங்களும் விசுவாசத்தோடு இணைந்திருக்க வேண்டும் (யாக்கோபு 1: 6).
2. “பிணியாளியை இரட்சிக்கும்”
அ) விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை காப்பாற்ற முடியுமா?
ஆம் சந்தேகத்திற்கு இடமில்லாமல்!
ஆ) பிணியாளிகளை காப்பாற்ற ஒரே வழி ஜெபம் தானா?
இல்லை! யாக்கோபு நோயுற்றவர்களைக் காப்பாற்ற ஒரே வழி ஜெபம் என்று யாக்கோபு கற்றுக்கொடுக்கவில்லை!
3. “கர்த்தர் அவனை எழுப்புவார்”
அ) கர்த்தர் இங்கு செயல்படுகிறார் ஏனெனில் அவருடைய பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால்.
ஆ) கர்த்தருடைய நாமத்தினால் எண்ணைய் பூசப்பட வேண்டும்.
இ) நோயுற்றவர்களை கர்த்தர் எழுப்ப முடியுமா?
இது பற்றி எந்த சந்தேகமும் இல்லைதான்!
ஈ) ஆனால் நோயாளிகளை எழுப்புவது என்பது அவருடைய சித்தத்திற்குட்பட்டதாக இருக்கின்றது
ஆனால் இதற்கான பதில் அனேக நேரங்களில் “இல்லை!” என்பதே!
a) பவுல் பல பலவீனங்களோடிருந்தார்.
b) அவர் குணபடுத்தப்படும்படி வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
c) தேவனுடய கிருபையை சார்ந்துகொள்ள அவர் வலியுறுத்தப்பட்டார்.
d) மற்றவர்களைக் குணமாக்கிய பவுல் மாம்சத்திலிருந்த தனது சொந்த முள்ளில் இருந்து காப்பாற்றப்படவில்லை.
e) ஞானமுள்ள அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய சித்தத்திலும் அவருடைய கிருபையிலும் மகிழ்ச்சியடைவதைத் தேர்ந்தெடுத்தார் (2 கொரிந்தியர் 12: 9-10).
4. “அவன் பாவஞ்செய்தவனானால்”
அ) நோய் எப்போதும் பாவம் தொடர்பானதுதான் என்று யாக்கோபு இங்கு கருத்து சொல்லவில்லை.
ஆ) எனினும், பாவங்கள் செய்திருந்தால், அவைகள் ஒப்புக்கொண்டு அறிக்கை செய்யப்பட வேண்டும்.
5. “அது அவனுக்கு மன்னிக்கப்படும்”
தேவனிடமிருந்து மன்னிப்பு என்பது தாராளமாக கிடைக்கும ஒன்றே! கர்த்தராகிய இயேசு ஒரு முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவனை எவ்வாறு குணப்படுத்தினார் என்பதை நாம் நினைவுகூருவோம். பாவம் என்னும் பிரச்சனையைத்தான் முதலில் அடையாளம் காட்டினார். பின்புதான் அவர் மன்னிப்பை வழங்கி முடக்குவாதத்தில் இருந்து அந்த மனிதனை சுகப்படுத்தினார் (மாற்கு 2: 1-12).
