
” உங்களில் ஒருவன் துன்பப்பட்டால்?”
வேதப்பகுதி: யாக்கோபு 5:13
ஜெபிக்க அழைப்பு
யாக்கோபு இப்போது தனது கவனத்தைத் ஜெபத்திற்கு திருப்புகிறார். இந்த பகுதியை பற்றிய தவறான புரிதலைத் தவிர்ப்பதற்கு,கவனமான ஆய்வு முக்கியம்.
“உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.” யாக்கோபு 5: 13-14
1. “உங்களில் ஒருவன் துன்பப்பட்டால்?”
அ) “துன்பம்” என்ற வார்த்தை எந்த வகையான துன்பத்தையும் விவரிக்க பயன்படுத்தப்படலாம் (நோய் அல்லது கடினமான எந்த நிலையும்).
ஆ) துன்பங்கள் மனிதர்கள் வாழ்வில் எதிர்பார்க்க வேண்டிய ஒரு பிரச்சினைதான்.
2. “ஜெபம்பண்ணக்கடவன்”
அ) இப்படி சொல்வதினால் அவர் மற்ற காரியங்களை செய்யாமல் இருக்கவும், முயற்சிகாமல் இருக்கவும் என்று அர்த்தம் அல்ல.
ஆ) அவர் துன்பப்படுகையில் ஜெபத்தில் தேவனைத் தேடாமல் இருந்துவிடக்கூடது.
3. “ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால்”
அ) மகிழ்ச்சியாக இருப்பது ஒரு ஆசீர்வாதம்.
ஆ) தேவனுக்கு நன்றி செலுத்துவது இயற்கையானதுதான் (சங்கீதம் 103).
4. “சங்கீதம் பாடக்கடவன்”
அ) இது யாக்கோபின் ஆலோசனை.
ஆ) சங்கீதம் பாடுவது ஒரு நல்ல வெளிப்பாடுதான்.
5. ” உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால்”
அ) வியாதி யாருக்கும் வரக்கூடும்.
ஆ) மூப்பர்களை வரவழைக்க வேண்டும்.
a) இது “மருத்துவத்திற்கு” மாற்று என்று கருதிவிடக் கூடாது.
b) பொருத்தமான சிகிச்சை பெறுவது அந்த நபரின் பொறுப்பாகும்.
இந்த கடினமான பகுதியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்
அ) யாக்கோபு 5:14ஐ முதல் நூற்றாண்டின் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
ஆ) குணப்படுத்துவதற்கான சிறப்பு வரம் கொடுக்கப்பட்ட அப்போஸ்தலர்களும் மற்ற தலைவர்களும் இருந்தார்கள்.
இ) அந்த நாட்களில் யாக்கோபு எழுதியதை நடைமுறையில் செய்வது அசாதாரணமானது அல்ல.
ஈ) ஆயினும், நோயாளிகளை குணப்படுத்துவதற்கான ஒரு மருத்துவ வழியாக புரிந்து கொள்ளப்பட இது எழுதப்படவில்லை.
