
“நாம் அனைவரும் அனேக விஷயங்களில் தவறுகிறோம் …”
வேதப்பகுதி: யாக்கோபு 3: 2
வாழ்க்கையின் தடுமாற்றங்கள்
வாழ்க்கையின் சில கட்டங்களில் அனைவருக்கும் இடறல் ஏற்படும் என்று யாக்கோபு தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறார். அப்போஸ்தலர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் தடுமாறினர். இது வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத உண்மை!
“நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.. “ யாக்கோபு 3: 2
1. ” நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம் “
அ) “தவறுகிறோம்” என்ற வார்த்தை பல அர்த்தத்தை கொண்டுள்ளது.
a) வீழ்தல்
b) பாவம் செய்தல்
ஆ) “நாம் எல்லோரும்” என்ற வார்த்தை கீழ்கண்டவர்களை உள்ளடக்கியது:
a) அப்போஸ்தலர்கள்
b) போதகர்கள்
c) விசுவாசிகள்
இ) இந்த உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
a) மனத்தாழ்மையாக
b) வெளிப்படையாக
2. ” ஒருவன் சொல்தவறாதவனானால் “
அ) ஒருசிலர் தாங்கள் தவறவேவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம் (1 யோவான் 1: 8, 10)
ஆ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே அப்படி “தவறாதவர்” என்று விவரிக்கப்பட முடியும்.
3. ” அவன் பூரணபுருஷனும் “
அ) பாவமற்ற ஒரு மனிதன் என்று யாக்கோபு விவரிக்கவில்லை.
ஆ) அவர் “முழுமையாக ஆவிக்குரிய முதிர்ச்சியை பெற்ற ஒருவர்” என்றே குறிப்பிடுகிறார்.
இ) தவறாத ஒருவரே “பரிபூரண மனிதர்” ஆவார்.
ஈ) ஆனால் அப்படி ஒருவர் இல்லை என்பதுதான் உண்மை!
4. “தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்”
அ) குதிரையை கட்டுப்படுத்த பயன்படுவதைத்தான் “கடிவாளம்” என்று சொல்லப்படுகிறது(சங்கீதம் 32:9).
ஆ) முழு சரீரத்தையும் கட்டுப்படுத்துவது கடினம்தான்.
இ) இந்த உலகத்தில் தவறாமல் இருப்பது கடினமான ஒன்றுதான்! அதை ஒத்துக்கொள்ளும் தாழ்மை இருக்கும்போது, நாம் தேவ பெலத்தை சார்ந்து வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும்.
